அடுக்குமாடி குடியிருப்பில் சுற்றி திரிந்த சிறுத்தை

0
323

பெங்களூரு உளிமாவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பேகூருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு சிறுத்தை சுற்றி திரிந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புக்குள் சிறுத்தை நடமாடியது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது அடுக்குமாடி குடியிருப்பின் வாகனம் நிறுத்தும் பகுதியில் சிறுத்தை சுற்றி திரிந்த காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தது.

இதைப் பார்த்த குடியிருப்பில் வசிப்பவர்கள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். இதுபற்றி உடனடியாக வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் குடியிருப்பு வாசிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வனத்துறையினர், உளிமாவு போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் குடியிருப்புக்கு விரைந்து வந்தனர். குடியிருப்பின் வாகனம் நிறுத்தும் பகுதி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டார்கள். ஆனால் சிறுத்தை எதுவும் சிக்கவில்லை.

அடுக்குமாடி குடியிருப்பு மக்கள், வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதை சில நாட்களுக்கு நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.