பெட்றோலிய ஊழியர்கள் போராட்டத்தால் எரிபொருள் நிலையங்களில் வாகன நெரிசல்!

0
462

நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட வேண்டும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். Petroleum Corporation Employees Strike Sri Lanka Tamil News

நேற்று பிற்பகல் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் நுழைந்து சில ஆவணங்களை எடுத்து செல்ல முயன்ற வேளை அங்கு வந்த ஒரு குழுவுடன் முறுகல் உண்டாக்கியது.

இதனையடுத்து முன்னாள் அமைச்சரின் பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் ஒருவர் உயிரழந்தார்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட வேண்டும் என பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெட்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக வந்த தகவலை அடுத்து எரிபொருள் நிலையங்களில் நீண்ட வாகன வரிசை காணப்பட்டது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

Tamil News Group websites