சென் நதியை ஒட்டியுள்ள Georges-Pompidou வீதி வாகன ஓட்டிகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வீதியை பாதசாரிகள் மட்டுமே பாவிக்கலாம் என பரிஸ் நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Georges-Pompidou street only_for padestrians
Georges-Pompidou வீதியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பரிஸுக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், வாகனங்களுக்கு தடை விதித்து, பாதசாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முடிவுக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் ஆர்பாட்டம் மேற்கொண்டதோடு, வழக்கும் பதிவு செய்தனர்.
இந்நிலையில், குறித்த வீதி பாதசாரிகளுக்கு மட்டும் என இன்று வியாழக்கிழமை ஒக்டோபர் 25 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் நடைப்பயிற்சி, நாற்சக்கர வண்டிகள், துவிச்சக்கரவண்டி என பரிஸ் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தொடர்ச்சியாக பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.