வைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

0
765
Raja Says TN Govt need take serious action Poet Vairamuthu

பாடகி சின்மயி விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார். (Raja Says TN Govt need take serious action Poet Vairamuthu)

மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கேரளாவில் இடதுசாரி அரசும், மக்கள் விரோத சக்தியும் இந்துத்துவ விரோத சக்திகளும் ஒருங்கிணைந்து சபரிமலை புனிதத்தை கெடுத்து விட வேண்டும் என கங்கணம் கட்டி செயல்படுகின்றன.

இது 6 மாதத்திற்கு முன்னர் கேரளாவில் இரு பிரிவினர் ஒரு தேவாலயத்திற்கு உரிமை கொண்டாடினர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் தரப்பினர் பேரணி போராட்டம் நடத்தினர். உடனே பினராயி விஜயன் அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்தினால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். எனவே கால அவகாசம் வேண்டுமென கோரியது.

இதே நடைமுறையை சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு ஏன் பின்பற்றவில்லை? இந்துக்களின் பழக்க வழக்கங்களை பின்பற்றாமல் ஆபாசமான புகைப்படங்களை பதிவிட்ட ரெஹனா பாத்திமா என்பவர் கெமாண்டோ உடையணிந்து சபரிமலை வரை சென்றுள்ளார்.

இது கேரள முதலமைச்சரின் கீழ்த்தரமான செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
கேரள அரசை கண்டித்து எதிர்வரும் 30 ஆம் திகதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் அய்யப்பன் நாமசங்கீர்த்த யாத்திரை நடக்கின்றது.

சின்மயி விவகாரம் குறித்து வைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தாய் ஆண்டாளை பழித்த வைரமுத்து வாழ் நாள் முழுவதும் நிம்மதியாக தூங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Raja Says TN Govt need take serious action Poet Vairamuthu