2600 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர் கைது

0
639
Two young men Jaffna 2600 drugs arrested

வவுனியா ஓமந்தை பொலிசாரின் நடவடிக்கையின்போது நேற்று மாலை 2600 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். Two young men Jaffna 2600 drugs arrested

நேற்று மாலை 5.30 மணியவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்றினை ஓமந்தைப் பகுதியில் வழிமறித்த பொலிசார் சோதனைக்குட்படுத்திய போது சட்டவிரோத போதை மாத்திரைகளை மறைத்து கொண்டுசென்ற 23, 32 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 2600 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இந்நடவடிக்கையின்போது வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேவிக்கிரம தலைமையில் கீழ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி. எஸ். எம். தென்னக்கோனின் வழிநடத்தலில் ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா தலைமையிலான குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஓமந்தைப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

tags :- Two young men Jaffna 2600 drugs arrested

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

சிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்

ஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை

இலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்!

மாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு ! இளைஞன் படுகாயம்!

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

Tamil News Live

Tamil News Group websites