இந்தியாவின் ரோ (RAW) உளவு அமைப்பு தமக்கெதிரான கொலைமுயற்சி சதித்திட்டத்தின் பின்னணியில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளளார். RAW Plans Murder President Maiththiripala Sri Lanka Tamil News
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவையும் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறி ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார அண்மையில் குரல் பதிவுகளை வௌியிட்டிருந்தார்.
இந்த கொலை திட்டத்தை முன்கூட்டியே அறிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த வார இறுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், இந்திப் பிரதமர் நரேந்திர மோடியையும் புதுடில்லியில் வைத்து சந்திக்க உள்ளார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மைத்திரி கருத்து கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு!
அரசை கவிழ்க்க இடமளியோம்! அமைச்சர் ருவன் விஜேவர்தன!
யாழில் பொலிஸ் அதிரடி வேட்டை – 41 பேர் கைது!
பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்ய முடிவு?