செல்பி எடுக்க முயன்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாப பலி

0
583
Three teenage students drown lake while taking

செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் மூவர் ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Three teenage students drown lake while taking)

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் என்.எஸ்.எஸ் முகாமிற்காக பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்களாவுக்கு சென்றனர்.

நேற்று காலையில் நெலமங்களா தாலுகா தாபஸ்பேட்டை அருகே உள்ள தேவரஒசஹள்ளி கிராமத்தில் உள்ள ரேவண்ணா சித்தேஷ்வரா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இதன்போது, கோவில் அருகே உள்ள ஏரியின் கரையில் 17 வயதுடைய பூரண சந்திரா, ஷசாங் மற்றும் 16 வயதுடைய முகமது மூர்தாஜ் ஆகிய 3 பேரும் நின்று கொண்டு செல்போன் மூலம் ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முயன்றனர்.

இந்த நிலையில், இவர்கள் 3 பேரும் ஏரிக்குள் தவறி விழுந்தனர். நீச்சல் தெரியாத காரணத்தினால் ஏரி தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி விரிவுரையாளர் சிவண்ணா ஏரிக்குள் குதித்து மாணவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.

அதற்குள் 3 மாணவர்களும் ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், இதன்பின்னர் அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Three teenage students drown lake while taking