நாளை (17) முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். Sri Lanka STF Jail Protection Sri Lanka Tamil News
சிறைச்சாலைகளில் இடம்பெறுகின்ற பல்வேறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளை சுற்றி பாதுகாப்பு மற்றும் வௌியில் இருந்து வருவோரை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட உள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் வெலிக்கட மற்றும் மெகசின் சிறைச்சாலைகளிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்காக இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட இருந்த போதிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக அதனை பிற்போட தீர்மானித்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
அரசை கவிழ்க்க இடமளியோம்! அமைச்சர் ருவன் விஜேவர்தன!
யாழில் பொலிஸ் அதிரடி வேட்டை – 41 பேர் கைது!
பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்ய முடிவு?
புதிய உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிப்பிரமாணம்!
ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!