சவால்களை எதிர்கொண்டு சாதிப்போம்! பிரதமர் ரணில் உறுதி!

0
468

மூன்று வருடங்களுக்கு முன்னர் இருந்த சவால்கள் இன்று இல்லை. எனினும் உள்நாட்டு கடன் பிரச்சினை, வெளிநாட்டு எரிபொருள் மற்றும் நாணய பெறுமதி வீழ்ச்சி என்பன எமது பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துகின்றன. இவை நாம் உருவாக்கிய பிரச்சினைகள் அல்ல. எனினும் இவற்றைக் கண்டு ஓடி ஒளியாமல் துணிச்சலுடன் அவற்றை தீர்ப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Prime Minister Ranil Speech Sri Lanka Tamil News

குருநாகல் மாவட்ட எஹெட்டுவெவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பொருளாதார ரீதியாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டு ஓடி ஒளியாமல் அவற்றை துணிச்சலுடன் எதிர் கொண்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் ஏற்றுமதி துறையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதற்கான வரி விலக்குகளை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சரை கேட்டுள்ளேன் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அரசை கவிழ்க்க இடமளியோம்! அமைச்சர் ருவன் விஜேவர்தன!

யாழில் பொலிஸ் அதிரடி வேட்டை – 41 பேர் கைது!

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்ய முடிவு?

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிப்பிரமாணம்!

ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!

Tamil News Live

Tamil News Group websites