- செல்போன் டவர் அமைப்பதால் மக்கள் நோய் வாய்ப்பட்டுச் சாவதோடு பறவையினங்களும் அழிந்துகொண்டிருக்கின்றன என்று ஜியோ டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.Disease coming – villagers fought raining Geo Tower india tamil news
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் ஜியோ போன் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் கும்பகோணம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, “ஏற்கெனவே இக்கிராமத்தில் அனைத்து கம்பெனிகளின் செல்போன் கோபுரம் அமைந்துள்ளதால் கதிர்வீச்சுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
செல்போன் கோபுரங்களால் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, பொது மக்களைப் பாதிக்கக்கூடிய வகையில் அமைக்கப்படும் செல்போன் கோபுரத்தை தடை செய்ய வேண்டும்.
இல்லையென்றால் மக்கள் நடமாட்டம் இல்லாத வெளிப்பகுதியில் செல்போன் கோபுரத்தை அமைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறையினர் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..! – வன்முறை வெடிக்குமா???
- கருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா!
- சபரிமலை விவகாரம் ; பெண்ணொருவர் தற்கொலைக்கு முயற்சி
- ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி தாக்கல் செய்ய வேண்டும்
- செல்பி எடுக்க முயன்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாப பலி
- பெருமாள் கோவில் 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு
- பெற்ரோல், டீசல் விலை குறைப்பு; பிரதமர் மோடி யோசனை
- சபரிமலைக்கு பெண்கள் அனுமதி ; நாளை பாதுகாப்பு பலப்படுத்த திட்டம்
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பத் தாமதம்
- இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது; மு.க. ஸ்டாலின்
- ஆட்டோவும், சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :