விளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை! – நடிகர் மற்றும் இயக்குனர் கைது!

0
523
Sexual harassment complaint actress - arrested Actor-director india tamil news

சென்னை செங்குன்றத்தில் விளம்பர படப்பிடிப்பின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாக நடிகை ஒருவர் அளித்த புகாரின்பேரில் பிரபல நடிகர் சண்முகராஜன் மற்றும் இயக்குநர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.Sexual harassment complaint actress – arrested Actor-director india tamil news

தனியார் ஜவுளி கடை ஒன்றின் விளம்பர படப்பிடிப்பு சென்னை செங்குன்றத்தில் நடைபெற்றது. இதில் நடிக்கவந்த தொலைக்காட்சி தொடர் நடிகை ராணி என்பவரை, இயக்குநர் ராஜ்கபூர் என்பவர் மற்றும் பிரபல நடிகர் சண்முகராஜன் ஆகியோர் பாலியல் தொந்தரவு செய்து தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து ராணியும், அவரது கணவர் பிரசாந்த் என்பவரும் செங்குன்றம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்த போலீசார், நடிகர் சண்முகராஜன் மற்றும் இயக்குநர் ராஜ் கபூர் என்பவரை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :