நடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி!

0
498
Actress Rani Withdraw complaint actor Shanmugarajan

நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை நடிகை ராணி வாபஸ் பெற்ற நிலையில், நடிகர் சங்கத்தின் மூலமாக சமரசம் ஏற்பட்டதாக சண்முகராஜன் தெரிவித்துள்ளார்.Actress Rani Withdraw complaint actor Shanmugarajan

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றின் படப்பிடிப்பு சென்னை கொரட்டூரில் கடந்த 11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் விருமாண்டி, எம்டன் மகன், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்த சண்முகராஜன் மற்றும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். படப்பிடிப்பின் போது நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ராணி புகார் அளித்தார்.

சீரியலில் தனக்கு கணவராக நடிக்கும் சண்முகராஜன், காட்சிகளின் போது தவறான எண்ணத்துடன் தொடுவதாகவும், அடிப்பது போன்ற காட்சிகளில், உண்மையிலேயே தன்னை அடித்ததாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து கேட்டபோது தன்னையும், தனது கணவரையும் சண்முகராஜன் தாக்கியதாகவும் ராணி செங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் படப்பிடிப்பு சமயங்களில் தன்னுடன் உணவருந்த வருமாறும், தனியாக தங்க அழைத்ததாகவும் சண்முகராஜன் மீது அவர் பரபரப்பு புகார் அளித்தார்.

இந்த நிலையில், தொலைக்காட்சி தொடர் நின்று விடக்கூடாது என்பதற்காக, சண்முகராஜன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்று விட்டதாக நடிகை ராணி தெரிவித்தார்.

இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சண்முகராஜன் செங்குன்றம் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். நடிகர் சங்கத்தின் மூலமாக இப்பிரச்சனையில் சமரசம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :