திருமணம் செய்துவைக்காத ஆத்திரத்தில் தந்தையை கொலைசெய்த மகன் கைது!

0
457
son killed father marriage issue india tamil news

விழுப்புரம் லக்கிநாயகன்பட்டி அருகே கொடியனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் என்பவருக்கு 5 மகன்கள் உள்ளனர்.son killed father marriage issue india tamil news

இவர்களில் முதல் மகன் கோபி வெளிநாடு சென்றிருந்த நிலையில், 2வது மகன் குமார் மற்றும் 3வது மகன் உதயசூரியன் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த கோபி, திருமணம் செய்துவைக்குமாறு தந்தையை வலியுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தில் அருகேயிருந்த தொலைக்காட்சி பெட்டியை தூக்கி தந்தையின் தலையில் கோபி போட்டுள்ளார். இதில படுகாயமடைந்த கந்தன் உயிரிழந்தார்.

தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :