பழைய எஞ்சின் ஆயில் மறுசுழற்சி ஆலையில் தீவிபத்து!

0
418
Old engine oil recycling plant fires india tamil news

ஈரோடு அருகே வாகன எஞ்சின் ஆயில் மறுசுழற்சி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தால், கரும்புகை சூழவே, பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.Old engine oil recycling plant fires india tamil news

கோணவாய்க்கால் என்ற ஊரில் சண்முகம் என்பவர், வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்ட எஞ்சின் ஆயிலை மறுசுழற்சி செய்யும் ஆலைநடத்தி வருகிறார்.

இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்த போது எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. ஆயில் இருந்த பேரல்கள் முழுவதையும் தீப்பற்றிக் கொள்ளவே, வானுயர கரும்புகை எழுந்தது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :