கர்நாடகாவில் மதுபோதையில் இருந்த நபர், அருகிலிருந்த மண்பாண்டையை எடுத்து போலீஸார் மீது கடுமையாக தாக்கியுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.person broke skull police alcoholism – Viral video india tamil news
கர்நாடகா மாநிலம் தேவனகிரி பகுதியில் மது அருந்திவிட்டு ஒருவர் இருசக்கர வாகனம் ஓட்டியுள்ளார். அவர் சென்ற வழியில் இருந்த போக்குவரத்து போலீஸார் இருவர், அவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, போலீஸாருக்கும், அவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியுள்ளது.
இதையடுத்து, ஆத்திரத்தில் சாலையின் ஓரத்திலிருந்த மண்பாண்டங்களை எடுத்து போலீஸார் மீது கடுமையாக தாக்கியுள்ளார் அவர்.
இதனால் காவல்துறையினர் ஒருவரின் மண்டை உடைந்தது. மற்றொருவரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.
மேலும் அவர் சட்டையை பிடித்து கீழே தள்ளித் தொடர்ந்து காவல்துறை அதிகாரியுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான தகவலறிந்த கூடுதல் காவலர்கள் அப்பகுதிக்கு வந்த மதுபோதையிலிருந்தவரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது :
#WATCH: A man who was allegedly drunk assaulted two traffic policemen in Karnataka's Davangere earlier today. Police arrested the man and a case has been registered against him. pic.twitter.com/kahGksU0A7
— ANI (@ANI) October 10, 2018
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- இரும்புத்திரை இயக்குனர் தாய் கவிதா சஸ்பெண்ட்..! – 40 நாட்கள் கழித்து நடவடிக்கை!
- இந்தியாவுக்கு கூடுதலாக கச்சா எண்ணெய் வழங்க சவுதி அரேபியா முடிவு!
- தனுஷ்கோடி கடலில் மூழ்கி கோவை மாணவர் உயிரிழப்பு! – எச்சரிக்கையை மீறி குளித்தபோது சோகம்!
- 471 பேருந்துகளின் சேவை துவக்கம்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!
- நம்பி நாராயணனிடம் ரூ.50 லட்சம் காசோலையை வழங்கினார் கேரள முதல்வர்!
- திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்!
- இந்திய – நேபாள சாலைப்பணிக்காக புலிகள் நடமாடும் காட்டில் 55 ஆயிரம் மரங்களை வெட்ட பாஜக அரசு முடிவு..!