ஜனாதிபதி வேட்பாளர் பசில் தான்! கோத்தாபாய உறுதி!

0
631
Gotabaya Rajapaksa Statement Sri Lanka Tamil News

டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாணத்தின் போது அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. Gotabaya Rajapaksa Statement Sri Lanka Tamil News

இதில் கலந்துகொள்வதற்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்தபின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.

இதன் போது அவர் கூறியதாவது,

கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவையே நான் பிரேரிக்கிறேன்.

எனக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கே சிலர் முயற்சி செய்கின்றனர். அதனாலேயே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எமக்குள் பிரச்சினை இருப்பதாக கதைகளை கட்டி வருகின்றனர்.

எமக்குள் எந்தப் போட்டியும் கிடையாது. என்னிடம் யாராவது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று கேட்டால் பசில் ராஜபக்ஷதான் பொருத்தமானவர் என்றே கூறுகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

மைத்திரிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! சஜித் பிரேமதாச!

கோத்தாபாய வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடிவு!

சீரற்ற காலநிலை : இராணுவம் தயார் நிலையில்!

மகிந்த – மைத்திரி சந்திப்பு பொய்யானது! பேராசிரியர் ஜி. எல் பீரிஸ்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!

Tamil News Live

Tamil News Group websites