திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்!

0
441
2 years crossing marriage running now lover india tamil news

திருமணம் முடித்து கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், இளம்பெண், ஒருவர் கல்லூரி கால காதலனோடு, குடித்தனம் நடத்த சென்றுள்ளார்… இவர்களை தேடிப்பிடித்து அழைத்து வந்த போலீசார், அறிவுரை கூறி, சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு வழிகாட்டாமல், ஒருசார்பாக நடந்து கொண்டுள்ளதாக, பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.2 years crossing marriage running now lover india tamil news

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த மங்கலேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ். இவருக்கும் கீழக்கரையை அடுத்த சிலையப்பன் வலசை பகுதியை சேர்ந்த நாக நந்தினி என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

துபாயில் உள்ள தனியார் மீன்பிடி நிறுவனத்தில் வேலை கிடைத்ததால், ஆனந்த் பிரகாஷ் வெளிநாடு பயணமானார். கடந்தாண்டு, மனைவி நாகநந்தினியை, சுற்றுலா விசாவில் துபாய்க்கு அழைத்துச் சென்ற ஆனந்த் பிரகாஷ், இரண்டு மாதம் அங்கு இருந்துவிட்டு, ஊருக்கு அழைத்து வந்துள்ளார். மீண்டும் பணி நிமித்தமாக, 6 மாதங்களுக்கு முன் துபாய் சென்ற ஆனந்த பிரகாஷ், மனைவி நாகநந்தினி, சுற்றுலா விசாவில் அங்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இதற்காக மனைவி நாக நந்தினிக்கு விமான டிக்கெட்டும் அனுப்பி வைத்துள்ளார் ஆனந்த பிரகாஷ். இந்த சூழலில், கடந்த சனிக்கிழமையன்று, நாக நந்தினி, வீட்டிலிருந்து மாயமானார். பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில், ஏர்வாடி காவல்நிலையத்தில், உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, ஏர்வாடி காவல்நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் நாகநந்தினி மாயமானதற்கான காரணம் தெரியவந்தது.

திருமணத்திற்கு முன்பு, கல்லூரியில் படித்தபோது, சக மாணவரான சின்ன ஏர்வாடியை சேர்ந்த வெண்ணிலவன் என்பவரைக் காதலித்துள்ளார். இந்த விவகாரம், நாகநந்தினியின் குடும்பத்தினருக்கு தெரியவரவே அவரது பெற்றோர், ஆனந்த பிரகாசுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். தனது காதலன் ஊரான சின்ன ஏர்வாடிக்கு அருகே உள்ள மங்கலேஸ்வரி நகருக்கே திருமணமாகி சென்ற நாகநந்தினி, காதலனுடனான நட்புறவை தொடர்ந்துள்ளார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் செல்போனிலும், வாட்ஸ் ஆப்பிலும் அளவளாவியுள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆனந்தபிரகாஷ் வெளிநாடு சென்றுவிடவே, இருவருக்கும் இடையிலான பழக்கும் உச்சத்தை அடைந்திருக்கிறது. இந்தச் சூழலில், நாகநந்தினி-வெண்ணிலவன் ஜோடி, தத்தமது வீடுகளிலிருந்து வெளியேறி, தூத்துக்குடிக்குச் சென்று தங்கியுள்ளனர். அங்கு அவர்களை கண்டுபிடித்த ஏர்வாடி போலீசார், காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்த ஆனந்த பிரகாஷ், நாக நந்தினி உறவினர்கள், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வெறும் மேஜர் என்ற ஒற்றை காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, காதலன் வெண்ணிலவனோடு, அனுப்புவதிலேயே போலீசார் குறியாக இருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்…. இதற்கு நாகநந்தினியின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது…

இந்த களேபரங்களுக்கு மத்தியில், நாகநந்தினி, தனது காதலர் வெண்ணிலவனுடன் செல்வேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்…. இதையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்களை சமாதானம் செய்த போலீசார், கல்லூரி கால காதலன் வெண்ணிலவனுடன், நாகநந்தினியை, அனுப்பி வைத்தனர்.

திருமணத்திற்கு முன்பே தனது காதல் விவகாரத்தில் நாகநந்தினி உறுதியாக இருந்திருந்தால், இப்போது, திருமணம் முடித்து ஒருவரை ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் நிற்க வேண்டிய நிலை வந்திருக்காது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :