சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி

0
479
teacher accused assaulting minor girl student

கொல்கத்தா நகரின் தெற்கு பகுதியில் உள்ள பாடசாலையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தினர். (teacher accused assaulting minor girl student)

கொல்கத்தா நகரின் தெற்கிலுள்ள தக்கூரியா பகுதியில் சிறுமிகள் கல்விகற்கும் பாடசாலையில் இயங்கி வருகின்றது.

இந்த பாடசாலையில் யூ.கே.ஜி வகுப்பில் படிக்கும் 5 வயது சிறுமி கடந்த சில நாட்களாக பாடசாலைக்கு செல்ல மாட்டேன் என அழுதுள்ளார்.

இந்தப் பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் கடந்த மாதம் 26 ஆம் திகதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவள் கூறியதை கேட்ட பெற்றோரும், உறவினர்களும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் இன்று காலை அந்த பாடசாலையை முற்றுகையிட்டனர்.

சிறுமியால் குற்றஞ்சாட்டப்படும் ஆசிரியரை பணிநீக்கம் செய்வதுடன், அவரை பொலிஸார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்துக்குள் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டதால் அவ்வழியாக செல்லும் வாகனப் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சமாதானமாக பேசி அவர்களை கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர்.

ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என அவர்கள் மறுத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பகுதியினர் பெண்கள் என்றுகூட கருதாமல் பொலிஸார் கண்மூடித்தனமாக தடியடி பிரயோகத்தில் ஈடுபட்டனர்.

இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதுடன், ஓரிரு பெண்களின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வழியும் காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின.

தடியடிக்கு பின்னர் அப்பகுதியில் கூடுதலாக பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியரை இன்று பிற்பகல் கைது செய்யதுள்ளதாக கொல்கத்தா நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; teacher accused assaulting minor girl student