பெற்ற தாயே குழந்தையைக் கழுத்து அறுத்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.daughter playing mummy skeleton daughter – shocking Madurai
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செந்தில்குமார்-முத்துமாரி தம்பதி வசித்துவருகின்றனர்.
இவர்களின் 3 வயது மகள் விசாகா இன்று காலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது, தாய் முத்துமாரி திடீரென விசாகாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டார். பின் தன் கையையும் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர், முத்துமாரியை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
உயிரிழந்த குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கொலை செய்த முத்துமாரி மனநலம் பாதிக்கபட்டவர் என்று கூறப்படுகிறது.
முத்துமாரி பல ஆண்டுகளாக மனநலம் தொடர்பான சிகிச்சை பெற்றுவருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
முத்துமாரி மனநலம் பாதிக்கப்பட்டவரா, இல்லை திட்டமிட்டு கொலை செய்தாரா, இல்லை வேறு எதுவும் குடும்பத் தகராறு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
பெற்ற மகளையே தாய் கொலை செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! – காவல்துறை தடியடி!
- பன்வாரிலால் புரோகித்தும் ஒரு மூத்த பத்திரிகையாளர் என்பது தெரியுமா?
- ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தீர்மானம்
- மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதம் ; ஐ.எம்.எப் அறிக்கை
- ரபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக மீண்டும் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
- நக்கீரனை சந்திக்க அனுமதி மறுப்பு; வைகோ தர்ணா போராட்டம்
- மத்திய பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும்; கருத்துக்கணிப்பில் தகவல்
- சபரிமலை வழக்கு; அவசர வழக்காக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
- சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் விபத்து; 06 தொழிலாளர்கள் பலி
- சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி