நாளை (09) கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. Opposition Party Special Meeting Sri Lanka Tamil News
இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டணி அரசாங்கம் ஒன்று அமைப்பது தொடர்பில் இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நேற்றைய தினம் நீர்கொழும்பில் இடம்பெற்ற அரசியல்வாதியொருவரின் மகளின் திருமண வீட்டில் சந்தித்துக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், தான் ஜனாதிபதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவில்லையென மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!
மகிந்த – மைத்திரி மீண்டும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!
சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!
விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!