பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் இடம்பெறுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். (DMK President MK Stalin issue bypoll)
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஆளுநர் பேசியிருப்பது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஊழல் குறித்து வெளியிட்டுள்ள ஆளுநர், நடவடிக்கை எடுக்காதது வேடிக்கையானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் இடம்பெறுவதாகவும் ஊழல் குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இடைத் தேர்தலை ஒத்திவைக்க கோரியதில் அதிமுகவுக்கு தோல்வி பயம் இருப்பது தெளிவாக தெரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்
- நக்சலைட் ஆயுததாரிகளை 3 ஆண்டிற்குள் ஒழித்துக்கட்டுவோம் ; ராஜ்நாத் சிங்
- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பு
- கேரளாவில் கன மழைக்கு எச்சரிக்கை
- டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் நேரில் முன்னிலை; கைதுசெய்ய தடை நீடிப்பு
- தமிழகத்திற்கு தேவையான திட்டங்களுக்கு நிதியளிக்க பிரதமரிடம் கோரிக்கை
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்; முதலமைச்சர் வசுந்தரா ராஜே
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; DMK President MK Stalin issue bypoll