ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தீர்மானம்

0
539
Central Govt planning increase number pensioners

ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஓய்வூதியத் திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு விரிவுபடுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. (Central Govt planning increase number pensioners)

முதியோர், விதவைகள், ஆதரவற்றவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கி வருகின்ற நிலையில், குறித்த ஓய்வூதிய தொகையுடன் மாநில அரசும் தன் பங்குக்கு பணத்தை கூடுதலாக கொடுத்து ஓய்வூதியம் வழங்குவது வழக்கமாகவுள்ளது.

ஆனால் மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகை மிகக் குறைவாக உள்ளது. அதாவது ஒரு நபருக்கு மாதம் 200 ரூபா மாத்திரமே மத்திய அரசு வழங்கி வருகின்றது.

11 ஆண்டுகளாக இதே தொகையை வழங்கி வருகின்ற நிலையில், மேலும் கூடுதலான நபர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கவில்லை.

எனவே ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க வேண்டும், கூடுதல் நபர்களை இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது ஏற்கனவே நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. கடந்த மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற விசாரணையின் போது ஓய்வூதியத் தொகை மிகக் குறைவாகக் காணப்பட்டது.

மத்திய அரசின் உதவிகள் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாகவும் நீதிபதிகள் கூறினார்கள். நாளை மறுநாள் மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. இதன்போது, மத்திய அரசு சார்பில் பல்வேறு தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.

அதாவது ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது, அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு திட்டத்தை விரிவு படுத்துவது போன்ற தகவல்கள் அதில் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த திட்டத்தை விரிவுபடுத்தவது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு ஆய்வுகளை தொடங்கியுள்ளது. தற்போது 3 கோடியே 9 இலட்சம் பேர் உதவி தொகைகளை பெற்று வருகிறார்கள். அதனை 2 மடங்காக்கி 6 கோடி பேருக்கு வழங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அது பற்றியும் ஆய்வு செய்யப்படுகின்றது.

ஏற்கனவே கடந்த நீதியொதுக்கீட்டில் ஓய்வூதிய திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

வருகின்ற நீதியொதுக்கீட்டில் இதற்காக பெரிய அளவில் நிதி ஒதுக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக ஆய்வு அறிக்கை பெறப்பட்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Central Govt planning increase number pensioners