சீரற்ற காலநிலையால் 237940 குடும்பங்கள் பாதிப்பு, 5 பேர் பலி

0
547
Climate rain 237940 families affected five killed

நாட்டில் தொடரும் சீரற்ற கால­நி­லை­யினால் மக்­களின் இயல்­பு­ வாழ்க்கை பாதிப்­ப­டைந்­துள்­ளதுடன் 237,940 குடும்­பங்­களை சேர்ந்த 803,516 பேர் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ள­தோடு ஐவர் பலியாகி­யுள்­ளனர். Climate rain 237940 families affected five killed

இவை தவிர மண்­ச­ரிவு மற்றும் வெள்ளம் கார­ண­மாக 6 வீடுகள் முற்­றாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் 1,046 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரிவித்­துள்­ளது.

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில தினங்­க­ளுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால், மண் சரிவு அபாயம், இடி, மின்னல் தாக்கம் என்பவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் நிலையம் மக்களைக் கேட்டுள்ளது.

அதி­க­ரிக்கும் மழை­வீச்­சியின் கார­ண­மாக பல பாகங்­களில் நீர்த்­தேக்­கங்­க­ளிலும் நதி­க­ளிலும் நீரின் அளவு அதி­க­ரித்து வரு­கின்­றது. இவ்­வாறு நீர் மட்டம் அதி­க­ரித்­தாலும் வெள்ளம் ஏற்­படும் அபாயம் இது­வ­ரையில் ஏற்­ப­ட­வில்லை. நீர்த்­தேக்­கங்­களின் நீர்­மட்­டங்­களும் சடு­தி­யாக அதி­க­ரித்­தி­ருக்­க­வில்­லை­யென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்த கால­நி­லை­யினால் தெற்கு அதி­வேக நெடுஞ்­சாலை மற்றும் கட்­டு­நா­யக்க அதி­வேக நெடுஞ்­சா­லை­க­ளிலும் பல விபத்து சம்­ப­வங்கள் பதி­வா­கி­ய­தோடு அதி­வேக நெடுஞ்­சா­லை­களில் பய­ணிக்கும் சார­திகள் அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறும் அவர்கள் மணிக்கு 60 கிலோ­மீற்றர் வேகத்தில் வாக­னங்­களைச் செலுத்­து­மாறும் அதி­வேக நெடுஞ்­சா­லைகள் பரா­ம­ரிப்பு மற்றும் திட்­ட­மிடல் பணிப்­பாளர் எஸ்.ஓப்­ப­நா­யக்க அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

இதே­வேளை, நாட்டின் பல பாகங்­களில் நேற்று பெய்த கடும் மழை­யினால் கொழும்பு உள்­ளிட்ட பல நக­ரங்­களின் புற வீதிகள் நீரில் மூழ்­கி­யுள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் பணிப்­பாளர் பிரதீப் கொடிப்­பிலி கேசரி வார­வெ­ளி­யீட்­டுக்குத் தெரிவித்தார்.

இதுவரையில் பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் பாரியளவு அனர்த்தங்கள் ஏற்படவில்லையென்றும் மேலும் தெரிவித்தார்.

tags :- Climate rain 237940 families affected five killed

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

மகிந்த – மைத்திரி மீண்டும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!

சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

Tamil News Live

Tamil News Group websites