ஜம்மு காஷ்மீரில் மின் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.mini bus collapses kashmir – 20 people killed india tamil news
ஜம்மு – காஷ்மீா் மாநிலத்தின் ஜம்மு, ஸ்ரீநகா் நெடுஞ்சாலையில் மினி பேருந்து ஒன்று சுமார் 40 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது.
பேருந்து பனிகல் பகுதியில் வந்த போது எதிர்பாரத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
அவா்களில் 10 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்.
மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்ட ரெட் கிராஸ் அமைப்புக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று மாநில அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- வேறு சாதியைச் சேர்ந்தவரோடு ஓடிப் போனதாக சிறுமியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்!
- காற்றுக்காக கதவை திறந்துவைத்த வேளையில் ஒரு மாத குழந்தை திருட்டு! – வேளச்சேரியில் பரபரப்பு!
- சிறுமிக்கு பூச்சி மருந்து கொடுத்து கொல்ல செய்த கொடூர தந்தை!
- தமிழகம், கேரளா, இலட்சத்தீவு பகுதிகளில் தொடர்ந்தும் கன மழைக்கு வாய்ப்பு
- இரசாயன தாக்குதல்; பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம்