ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; இரண்டு பேர் பலி

0
543
2 Dead Terrorists Open Fire Srinagar Days

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். (2 Dead Terrorists Open Fire Srinagar Days)

ஜம்மு – காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், ஆயுததாரிகள் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதுடன், அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

கொல்லப்பட்டவர்கள், தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பிரதான கட்சிகளில் ஒன்றான தேசிய மாநாட்டு கட்சியின் உறுப்பினர்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதற்கு, அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க தீவிரவாதிகளே, இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; 2 Dead Terrorists Open Fire Srinagar Days