அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும் ; ஜி.கே.வாசன்

0
639
GK vasan says Government employees should resolve

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது கோரிக்கைகளை நிலுவையில் வைக்காமல் உடனே தீர்வு காண வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். (GK vasan says Government employees should resolve)

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விடுத்துள்ள அறிக்கையில் அவர் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வருகின்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தமிழக அரசு முறையான பேச்சுவார்த்தை நடத்தாததும், பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியதும், பின்பு நிறைவேற்றாமல் இருப்பதும், தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதும் இன்னும் நீடித்துக்கொண்டே போகிறது.

இதற்கெல்லாம் காரணம் தமிழக அரசு தான். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது கோரிக்கைகளை இனியும் நிலுவையில் வைக்காமல் உடனடி பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; GK vasan says Government employees should resolve