நாளை வெள்ளிக்கிழமை பரிஸில் புகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Charles Aznavour final tribute event held Friday
ஒக்டோபர் 1 ஆம் திகதி அதிகாலை Charles Aznavour, தனது 94 ஆவது வயதில் உயிரிழந்தார். அவருக்கான பொது அஞ்சலி நிகழ்வு பரிஸின் Invalides இல் இடம்பெறும் என செவ்வாய்க்கிழமை இரவு எலிசே மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை காலை முதல் இந்த நிகழ்வுகள் Invalides பகுதியில் இடம்பெறும்.
இந்த நிகழ்வில் பல அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், குடும்பத்தினர் என பலர் கலந்து கொள்ள உள்ளனர். அத்துடன் ஜனாதிபதி மக்ரோன், முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
மேலும், மறைந்த பாடகர் Johnny Hallyday இன் இறுதி அஞ்சலி நிகழ்வு கடந்த வருட டிசம்பரில் இடம்பெற்ற போது, ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.