நீலகிரியில் கார் விபத்தில் 7 சுற்றுலாப் பயணிகள் பலி

0
470
Near Nilgiris car accident Chennai 7 deaths

நீலகிரி மசினகுடி அருகே கார் விபத்தில் சென்னையைச் சேர்ந்த 7 சுற்றுலாப் பயணிகள் மரணமடைந்துள்ளனர். (Near Nilgiris car accident Chennai 7 deaths)

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த 7 பேர் காணாமல் போனதாக கூறப்பட்டது.

மசினகுடி வனப்பகுதிக்குள் நேற்று காலை சென்றவர்கள் இதுவரை திரும்பாத நிலையில், தொடர்ந்து காணாமல் போன 7 பேரையும் வனத்துறையினர் தேடி வந்தனர்.

தற்போது மசினகுடி அருகே கார் விபத்தில் சென்னையை சேர்ந்த 7 சுற்றுலா பயணிகள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதகையில் இருந்து மசினகுடிக்கு சென்ற போது கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. நேற்று நிகழ்ந்த விபத்து பற்றி இன்று வனத்துறைக்கு தகவல் தெரியவந்தது.

7 பேர் சென்ற கார், கல்லட்டி மலை பகுதியில் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. 35 ஆவது கொண்டை ஊசி வளைவில் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானமை தெரியவந்துள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Near Nilgiris car accident Chennai 7 deaths