தஞ்சாவூர் தஞ்சாவூரில், அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை, மாநகராட்சி குப்பை வண்டியில் போலீசார் அனுப்பி வைத்தது, வேதனையை ஏற்படுத்தி உள்ளது.godmather body garbage cart india tamil news
தஞ்சாவூர், காந்திஜி சாலையில், கல்லணை கல்வாய் கரையில் அமைக்கப்பட்டிருக்கும் நடைமேடையில், சில நாட்களாக, மூதாட்டி ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு, படுத்து கிடந்தார்.
தினமும், நடை பயிற்சி சென்ற சிலர், மூதாட்டியின் நிலையை பார்த்து பரிதாபப்பட்டதோடு, அவருக்கு உணவும் வாங்கிக் கொடுத்து வந்தனர்.
அவரது உடல்நிலை மோசமாகி, நேற்று முன்தினம், அதே இடத்தில் இறந்து கிடந்தார்.
நடை பயிற்சிக்கு சென்றவர்கள், ‘108’ அவசரகால ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்ததோடு, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். யாரும் வரவில்லை.
இதனால், மூதாட்டியின் உடலில் ஈ மொய்க்க ஆரம்பித்தது. மதியத்துக்கு மேல் சாவகாசமாக வந்த போலீசார், மாநகராட்சி ஊழியர்களுக்கு பேசி, குப்பை வண்டியை எடுத்து வரச் செய்தனர்.
குப்பை வண்டி வந்ததும், மாநகராட்சி ஊழியர்களிடம், ‘உடலை குப்பை வண்டியில் ஏற்றி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பிணவறையில் ஒப்படைத்து விடுங்கள்’ என கூறி சென்றனர்.
இதையடுத்து, அவர்கள், துணியால் உடலைச் சுற்றி, குப்பை வண்டியில் ஏற்றி சென்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த அறிகுறி கூட இல்லாத வகையில் வரலாறு மாற்றம்! – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!
- தேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால் தேசவிரோதியா? – சிவசேனா தாக்கு!
- அதிமுக ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்!
- ஆதாயம் கிடைத்தால் இந்துக்களை கொல்வதற்கும் பாஜக யோசிக்காது! – கெஜ்ரிவால் அதிரடி!
- காந்தியை சுட்ட 4வது தோட்டா யாருடையது?
- கொச்சியில்… காங்கிரஸ் கட்சியினருக்கும்… போலீசாருக்கும்… கடும் மோதல்!
- மக்களின் நம்பிக்கையை வீணடித்து விட்டார்! – நடிகை விஜயசாந்தி!
- துத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை விரைவில் திறப்போம்! – அனில் அகர்வால்!
- கருணாஸ் எம்.எல்.ஏ பதவி பறிப்பு? – ஈபிஎஸ்-ஓபிஎஸ் நீண்ட நேர ஆலோசனை!
- கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி! (காணொளி)
- உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி – இந்திய பிரதமருக்கு இடையில் சந்திப்பு