அனைத்துலக வன்முறையற்ற நாளில் பாரதிய ஜனதா கட்சி விவசாயிகளை கொடூரமான முறையில் தாக்குவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். (Farmers cannot even come Delhi air grievances)
விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை, விவசாய கடன் தள்ளுபடி, மின்சார கட்டண குறைப்பு, பெற்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு உத்தரப் பிரதேச விவசாயிகள் வந்த போது, எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதிக்க மறுத்து பொலிஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டை வீசியதாலும் டெல்லி உத்தரப் பிரதேச எல்லை போர்க்களமானது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ‘அனைத்துலக வன்முறையற்ற நாளில், டெல்லிக்கு அமைதியான முறையில் வந்த விவசாயிகளை கொடூரமான முறையில் தாக்கி பாரதிய ஜனதா காந்தி ஜெயந்தியை கொண்டாடுகின்றது.
இப்போது தங்களுடைய குறையை தெரிவிக்க விவசாயிகள்கூட டெல்லிக்கு வரமுடியாது’ என்று கூறியுள்ளார்.
விவசாயிகள் டெல்லிக்குள் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவை பிறப்பித்த பொலிஸ், விவசாயிகளை அனுமதிக்கவில்லை.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம்; நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை
- பிரதமர் வாய்ப்பை உதறித் தள்ளினார் கருணாநிதி; ப.சிதம்பரம்
- சபரிமலை அனுமதி விவகாரம் பெண் சமூக ஆர்வலருக்கு கொலை எச்சரிக்கை
- திருச்சியில் தாயின் சலடம் மீது அகோரி நடத்திய விசித்திர பூஜை
- போதைப் பொருள் கும்பலை எதிர்த்த நபர் சுட்டுக்கொலை; வைரலாகும் காணொளி
- விவசாயிகளுக்கும் அதிரடிப்படையினருக்கும் வாக்குவாதம்; டெல்லி எல்லையில் பதற்றம்
- ஹைட்ரோகார்பன் திட்டத்தால் வரலாறு காணாத கிளர்ச்சி வெடிக்கும்
- வடமாநில விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Farmers cannot even come Delhi air grievances