இளநீர் திருடி விற்பனை! – பணத்தை பிரித்து தராத நண்பனை கொலை செய்த கும்பல்!

0
444
stealing coconut water - gang killed partner india tamil news

திருப்பூர் மாவட்டம் எல்லக்காடு பகுதியை சேர்ந்த மகேந்திரன் நேற்று முதல் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கள்ளப்பாளையம் நொய்யல் ஆற்றங்கரையில் ஆண் சடலத்தை கைப்பற்றி விசாரித்த போலீசார், அது மகேந்திரனின் சடலம் என கண்டறிந்தனர்.stealing coconut water – gang killed partner india tamil news

சந்தேகத்தின் பேரில் மகேந்திரனின் நண்பர்கள் பாண்டியன், செந்தில்குமார், குமார் ஆகிய மூவரிடம் விசாரணை நடத்தியதில், மகேந்திரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

மதுஅருந்த பணம் இல்லாததால், இளநீர் திருடி விற்றதாகவும், பணத்தை முறையாக மகேந்திரன் பிரித்து தராததால், அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்தனர்.

மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :