கேரளாவில் மகாத்மா காந்தியின் சிலை விஷமிகளால் உடைப்பு

0
412
mahatma gandhi statue vandalized kerala

கேரளா – கொச்சியில் மகாத்மா காந்தியின் சிலையை இரண்டாக உடைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. (mahatma gandhi statue vandalized kerala)

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை கொண்டாட இந்தியா முழுவதும் தாயாராகி வருகின்றது.

இந்த நிலையில், கேரளா மாநிலம் கொச்சியில் காந்தியின் சிலையை இரண்டாக உடைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தேசிய தந்தை என்று சொல்லப்படும் மகாத்மா காந்தியின் சிலையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்து இரண்டாக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, உடைக்கப்பட்ட சிலை அருகேயே தர்ணா போராட்டம் காந்தியின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டது.

இதன் பின்னர், பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில் சிசிடிவியில் பதிவாகியுள்ள இச்சம்பவத்தை வைத்து பிஹாரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; mahatma gandhi statue vandalized kerala