அவுஸ் பயங்கரவாத தாக்குதல் : இலங்கை இளைஞன் மொஹமட் நிஸாம்தீன் விடுதலை!

0
499

அவுஸ்திரேலியா, சிட்னியில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன் மொஹமட் நிஸாம்தீன் (25) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். Australia Mohamed Nizamdeen Released Sri Lanka Tamil News

சிட்னி நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று கல்வி கற்று வந்து நிலையில் அங்கு குறித்த இளைஞன் பயங்கரவாத குற்றச்சாட்டில் கடந்த ஆகஸ்ட் 30ம் திகதி கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத தாக்குதல் ஒன்று தொடர்பில் குறிப்பு புத்தகம் அவரிடம் காணப்பட்டதாக குறித்த இளைஞன் மீது அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

எனினும் அந்த குறிப்புப் புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் நிஸாம்தீனின் கையெழுத்து என உறுதிப்படுத்த முடியாத நிலையில் அவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிஸாம்தீனிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய எந்தவொரு பொருளும் காணப்படவில்லை என உறுதிப்படுத்தி நியூ சவுத் வேல் பொலிஸ் ஆணையாளர் நீதிமன்றத்துக்கு இரகசிய வாக்குமூலம் வழங்கியுளளார்.

குறித்த வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரணை செய்யப்படவுள்ளதாக ‘த அவுஸ்திரேலியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

Tamil News Live

Tamil News Group websites