பெண் எஸ்.பி.யை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கிய ஐ.ஜி. மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.TAMIL NEWS sexual complaint immediate action ig – stalin’s assertion
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியாற்றும் அலுவலகத்திலேயே பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐ.ஜி. மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் முதல்வருக்கு கண்டனத்தை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
புகார் கொடுத்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் ஐ.ஜி.க்கு உபகாரம் செய்திடும் வகையில் பாதுகாப்பது பெண்ணினத்தின் கண்ணியத்திற்கும், பாதுகாப்பிற்கும், காவல்துறையில் பணிபுரியும் பெண்களின் பணியிடப் பாதுகாப்பிற்கும் பேராபத்தாக மாறியிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெண் போலீஸ் அதிகாரி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஐஜி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துறையில் இருந்து அவர் மாற்றப்பட வேண்டும் என்றும், சிபிசிஐடியில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் ஐ.ஜி. கைது செய்யப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கைதுக்குக் காரணம் கூவத்தூர் ரகசியம்தான்! – கருணாஸ் ஆதரவாளர்கள்!
- தமிழ் மக்களின் உணர்வுக்கும் மதிப்பளித்து எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் கோரிக்கை!
- திருமுருகன் காந்தியை தனியறையில் சிறைவைத்து சித்திரவாதை! – வேல்முருகன் கண்டனம்!
- கள்ளத்தொடர்பு வைத்திருந்தால் ஆண்களுக்கு தண்டனை இல்லை
- சென்னையில் தொழில் அதிபர் வீட்டில் 82 சிலைகள் பறிமுதல்
- பிரதமர் மோடிக்கு ஐ.நா வின் சுற்றுச்சூழல் விருது
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ வைத்தியசாலையில் அனுமதி