மத்திய பிரான்ஸான Clermont-Ferrand நகரில், 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் தாம் நடுவீதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். French Woman raped Clermont-Ferrand city
இச்சம்பவம் கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி மத்திய பிரான்ஸான Clermont-Ferrand நகரில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், செப்டம்பர் 22 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது, நபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்துள்ளான்.
திடீரென கைகளால் அந்த பெண்ணின் வாயை பொத்தி, வீதியின் ஓரத்தில் நின்றிருந்த பேரூந்துக்குப் பின்னால் இழுத்துச் சென்றுள்ளான். இதனால் சத்தமாக குறித்த பெண்ணால் கத்த முடியாமல் போய்விட்டதாகவும், அதன் பின்னர் குறித்த பெண்ணின் ஆடைகளை களைந்து, கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்’ என தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு சற்று முன்னதாக அதே பகுதியில் வேறு பெண் ஒருவரை பின்னால் இருந்து தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டதாகவும், ஆனால் அப்பெண் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் இரண்டு வழக்குகளையும் விசாரித்து வருகின்றனர். ஆனால் இன்னும் குறித்த நபர் கைது செய்யப்படவில்லை.