ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச சிறுவர் தின நிகழ்ச்சிகளை, சகல அரசாங்கப் பாடசாலைகளிலும், இவ்வாண்டுக்குரிய தொனிப் பொருளில் நடத்தப்படல் வேண்டும் என, கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை அதிபர்களிடமும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. Important Announcement Principals Sri Lanka Tamil news
தைரியமாக முன்னோக்கிச் செல்வதற்காக நமது சிறார்களைப் பலப்படுத்துவோம்” என்பதே, இவ்வாண்டுக்கான உலக சிறுவர் தினத்தின் தொனிப்பொருளாகும்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இத்தொனிப் பொருளிலேயே, சிறுவர் தின நிகழ்வுகள் நடத்தப்படல் வேண்டும் என, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
சகல மாகாணங்களிலுமுள்ள கல்விச் செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருக்கு, இது தொடர்பிலான அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!
கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!
அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் உண்ணாவிரத போராட்டம்
தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!
விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்
உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!