மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள்!

0
470
Doctors perform surgery candle light

Doctors perform surgery candle light }

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மயூர்பஞ்ச் மாவட்டத்தில், அரசு மருத்துவமனை இருக்கும் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கூறப்படுகின்றது. மின்சாரம் இருக்கும் நேரங்களிலும் குறைந்த அழுத்த மின்சாரமே வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், பல சமயங்களில், அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள், மொபைல் போன் வெளிச்சம் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

மின்சாரம் கிடைக்க பல முயற்சிகள் எடுத்தும் பலன் கிடைக்காததால், இதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என அங்கு வேலை பார்க்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எப்போது மின்சாரம் வரும் என காத்திருக்கும் அவல நிலைதான் இங்கிருப்பதாக, நோயாளிகள் கூறியுள்ளனர்.

Tags; Doctors perform surgery candle light

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :