டெல்லியில் கொடூரம் நண்பியை கொலை செய்து வீசிய நபர் கைது

0
411
Chopped body parts minor girl found 2 bags

தனது நண்பி வேறொருவருடன் பேசி பழகுவதை அறிந்த நபர், அந்த பெண்ணை கொலை செய்து உடலை துண்டு துண்டுகளாக வெட்டி வீசிய கொடூரம் டெல்லியில் இடம்பெற்றுள்ளது. (Chopped body parts minor girl found 2 bags)

டெல்லி பாரபுல்லா பாலத்தின் அடியில் இரு பைகளில் பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற பொலிஸார் குறித்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், விசாரணை மேற்கொண்டதில் ரிஸ்வான் கான் என்பவரை கைது செய்துள்ளனர்.

நிஜாமுதின் பகுதியில் உள்ள நிஜாம் நகரை சேர்ந்த 20 வயதுடைய ரிஸ்வான் கான் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கடந்த 11 மாதங்களாக பழகி வந்துள்ளார்.

அந்த பெண் வேறு ஒருவருடன் பேசி பழகுவதை அறிந்த ரிஸ்வான், அந்த பெண்ணை கண்டித்தார். ஆனால் அவர் பேசுவதை தொடர்ந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரிஸ்வான், அந்த பெண்ணை கடந்த ஞாயிறு அன்று சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ரிஸ்வான், தான் கொண்டு சென்ற கத்தியால் அந்த பெண்ணை குத்திக் கொன்றார். ஆனாலும் ஆத்திரம் தீராத ரிஸ்வான், அவரது உடலை பல துண்டுகளாக வெட்டினார்.

இதனை இரு பைகளில் போட்டு அங்குள்ள பாரபுல்லா பாலத்தின் அடியில் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, பொலிஸார் ரிஸ்வானை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Chopped body parts minor girl found 2 bags