சென்னையில் மின்சார புகையிரதம் மோதி இரண்டு பேர் பலி

0
381
Two killed electric train crossing tracks

சென்னையில் தண்டவாளத்தைக் கடந்த போது மின்சார புகையிரதம் மோதி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (Two killed electric train crossing tracks)

சென்னையில் புகையிரத நிலையங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள புகையிரத நிலையங்களில் பயணிகள் யாரும் தண்டவாளத்தை கடக்கக்கூடாது என்றும் நடை மேம்பாலங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் ரெயில்வே தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது.

எனினும் அபாயத்தை உணராமல் சிலர் தண்டவாளத்தை கடக்கும் போது புகையிரதத்தை அடிபட்டு உயிரிழக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை கிண்டி புகையிரத நிலையங்களுக்கு இடையே இன்று தண்டவாளத்தை கடக்க சிலர் முயன்றுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த மின்சார புகையிரதத்தில் மோதி, 2 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் புகையிரத்தின் படிக்கட்டில் பயணம் செய்த பயணிகள் 5 பேர் பரங்கிமலை புகையிரத நிலையத்தின் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Two killed electric train crossing tracks