2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

0
506
ayanavaram girl rape case - 6 people plead cancellation thug legislation

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் தமிழகத்தில் மாநில பாட திட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டிருந்தார்.offer homework 2 classes – high court explanation india tamil news

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என்று முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து, இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :