அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று யாழில் உண்ணாவிரத போராட்டம்

0
698
Today hunger strike support political prisoners

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. Today hunger strike support political prisoners

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள ஏற்பாட்டாளர்கள்,‘அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 10 நாட்களாகத் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அவர்களில் இருவரது நிலைமை மோசமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் நாளை திங்கட்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும்.

இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சி, இன, மத, பிரதேச பேதமின்றி அனைத்துத் தரப்பினரையும் பங்குபெறுமாறு அழைக்கிறோம்’ என தெரிவித்துள்ளனர்.

tags :- Today hunger strike support political prisoners

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!

விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்

உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!

ஐ.நா பொதுச்சபையில் இன்று ஜனாதிபதி உரை

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஒழுங்குபடுத்த முடியாது! மாவை கருத்து!

பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியம்

காணாமல்போன தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!

கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து ஜனாதிபதியிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தபாய

ஜனாதிபதி அமெரிக்கா பயணமானார்

Tamil News Live

Tamil News Group websites