திருநங்கைகளுக்கு இடையில் மோதல்; 17 பேர் கைது

0
461
clash transgender cut scythe one 17 people arrested Kanchipuram

காஞ்சிபுரம் வளத்தோட்டம் பகுதியில் திருநங்கைகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (clash transgender cut scythe one 17 people arrested Kanchipuram)

வளத்தோட்டம் பகுதியில் உள்ள திருநங்கைகள் குடியிருப்பில் திருநங்கைகள் இரு குழுக்களாக செயற்படுகின்றனர்.

ஒரு தரப்பினர் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட சுயதொழில் செய்து வருகின்ற அதேவேளை, மற்றொரு தரப்பினர் பாலியல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததுடன், தவறான செயற்களில் ஈடுபடும் திருநங்கைகளுக்கு ஆதவராக உள்ள ரவுடிகள், கடந்த மாதம் சுயதொழில் செய்யும் திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தி வீடுகளுக்கும் தீ வைத்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட திருநங்கைகள் பொலிஸில் முறையிட்டதை அடுத்து திருநங்கைகள் குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டது.

கமராக்கள் பொருத்தப்பட்டது பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதனால் அவர்கள் மற்றொரு தரப்பு திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் ஒருவருக்கு தலை மற்றும் முகத்தில் அரிவாள் வெட்டு விழுந்ததுடன், சிலர் படுகாயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 17 பேரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; clash transgender cut scythe one 17 people arrested Kanchipuram