சில்க் ஸ்மிதா நடித்த திரைப்படம் 39 வருடங்களுக்கு பின் ரிலீசாகவுள்ளது….!!

0
489
Silk Smitha 39 Years Old Movie Release, Silk Smitha 39 Years Old Movie, Silk Smitha, Smitha 39 Years Old Movie Release, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

1970கள் முதல் 90கள் வரை நடிகை சில்க் ஸ்மிதா இல்லாத படங்களே இல்லை. திரையுலகின் உசத்தில் இருந்த வேளையில் திடீரென 1996ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் இந்த செயல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.Silk Smitha 39 Years Old Movie Release

வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமானபோது அவரது கதாபாத்திரத்தின் பெயர் சில்க். ஸ்மிதாவாக இருந்த அவர் அதன்பிறகு சில்க் ஸ்மிதா என அழைக்கப்பட்டார்.

வண்டிச்சக்கரம் படத்தில் நடிப்பதற்கு முன் ஸ்மிதா நடித்த, ‘ராக தாளங்கள்’ படம் தற்போது திரைக்கு வரவிருக்கிறது.

ஆம் ஸ்மிதா நடித்த இந்த படம் 39 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வர உள்ளது.

இப்படம் குறித்து அப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான திருப்பதி ராஜா கூறும்போது,’ வண்டிச்சக்கரம் படத்துக்கு முன்னதாக ஸ்மிதா என் படத்தில்தான் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அவருக்கு சம்பளமாக 6 ஆயிரமும், முன்பணமாக 1800 ரூபாயும் கொடுத்திருந்தேன். அதற்கான அக்ரிமென்ட்டை நான் பிரேம் போட்டு வைத்திருக்கிறேன். வீணையின் நாதங்கள், தங்க தாமரை என இரண்டு படங்களை அவரை வைத்து இயக்கினேன். ஆனால் சாதியை பின்னணியாக கொண்ட படமாக உருவாக்கப்பட்டிருந்ததால் அப்போது அதை வெளியிட முடியவில்லை.

அந்த 2 படங்களையும் ஒன்றிணைத்து ராக தாளங்கள் என்ற பெயரில் சில மாற்றங்களுடன் உருவாக்கியிருக்கிறேன். இதில் ஸ்மிதா கதாபாத்திரத்தின் பெயர் அபிராமி. இப்படத்துக்கு பாலாஜி இசை அமைத்திருக்கிறார். நாகராஜ், ரஞ்சன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். விரைவில் இப்படம் வெளிவரவுள்ளது’ என்றார்.

Picture credit – Google

Silk Smitha 39 Years Old Movie Release
நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்