சீன கடற்படையினால் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்றை இலங்கைக்கு சீனா வழங்கவுள்ளது. 1993ஆம் ஆண்டு சீனக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ‘ரொங்லிங்’ என்ற ஏவுகணைப் போர்க்கப்பலே இலங்கை கடற்படைக்கு வழங்கப்படவுள்ளது. China offers missile warship Sri Lanka
தற்போது சீனாவில் உள்ள ஹூடோங் துறைமுகத்தில், இந்தக் கப்பலுக்கு மீள் பொருத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இலங்கை கடற்படையின் வண்ணம் தீட்டப்பட்டு, பி-625 என்ற தொடர் இலக்கமும் எழுதப்பட்டுள்ளது.
இந்தப் போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களின் அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த நவீன போர்க்கப்பலின் பிரதான போராயுதமாக, ரி-79 வகையைச் சேர்ந்த 100 மி.மீ இரட்டைக் குழல் பீரங்கி இருக்கும்.
அத்துடன், கப்பலின் பின்புறமாக, ரி-76ஏ ரகத்தைச் சேர்ந்த, 37 மி.மீ இரட்டைக் குழல் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் இரண்டும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தக் கப்பலில் உலங்குவானூர்தி ஒன்று தரையிறங்குவதற்கான தளமும், நடுத்தர உலங்குவானுர்தி ஒன்றுக்கான தரிப்பிடம் மற்றும் களஞ்சியமும் உள்ளது.
tags :- China offers missile warship Sri Lanka
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
- மன்னார் அகழ்வுப் பணிகள்; தொடரும் மர்மம்
- ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் வாயு கசிவு; ஐவர் வைத்தியசாலையில்
- கொள்ளுப்பிட்டியில் மசாஜ் தொழிலில் ஈடுபட்ட 14 பெண்கள் கைது
- ஆட்கடத்தல்களை தடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் பல நடவடிக்கைகள்
- ரவி கருணாநாயக்க மீது வழக்குத் தாக்கல்
- யாழ். பல்கலைக்கழகத்தில் கைக்குண்டு மீட்பு
- தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்
- குளவிக் கொட்டுக்கு இலக்காகி 20 மாணவர்கள் வைத்தியசாலையில்
- இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி
- சுமந்திரனை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம்