85 நாட்கள் கடந்து செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுதான் போட்டியாளர்கள் அனைவரும் உண்மையாக விளையாடி வருவதாக பார்வையாளர்கள் கூறிவருகிறார்கள். Bigg boss 2 Aishwarya Yashika anand fight
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், தன்னை இத்தனை நாள் காப்பாற்றிய தோழி யாஷிகாவையே எதிர்த்து கத்தி சண்டையிடுகிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் அருகில் வந்த யாஷிகா, “நீ செய்யும் தப்புக்கு அடுத்தவங்களை சம்மந்தப்படுத்தி பேசாதே” என கூறுகிறார். உங்களுக்காக தான் நான் அவர்களிடம் சென்று பேசியதாக கூறுகிறார். இதற்கு ஐஸ்வர்யா யாஷிகாவிடம் பெரிதாக கத்திக்கொண்டு சண்டைக்கு போகிறார்.
அதன் பிறகு, ஆமாம் நான் பொய் சொல்கிறேன் என கத்துகிறார். இவரின் பேச்சால் டென்ஷன் ஆன யாஷிகா, நீ இங்கிருந்து போ என கூறுகிறார். அதற்கு ஐஸ்வர்யா நான் ஏன் போகவேண்டும். நீ போ என கூறுகிறார்.
இவ்வளவு நாளாக ஒன்றாக இருந்த யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள விரிசல் இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் இந்த வார எவிக்க்ஷனில் ஐஸ்வர்யா வெளியேற கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.