செக்கச் சிவந்த வானம் படத்தில் அருண் விஜய்யின் அனுபவங்கள்

0
450
Arun Vijay Chekka Chivantha Vaanam, Arun Vijay, Chekka Chivantha Vaanam, Chekka Chivantha Vaanam Arun Vijay, Tamil News, Tamil Cinema News

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் செக்கச்சிவந்த வானம்.Arun Vijay Chekka Chivantha Vaanam 

அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா, தியாகராஜன், ஜெயசுதா என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

படம் செப்டம்பர் 28ம் திகதி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர் மணிரத்னமின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய அருண் விஜய்,

செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தது ஒரு புதுமையான அனுபவம். தினமும் ஒரு புது விஷயத்தை கற்றுக் கொண்டேன். மணிரத்னம் படத்தில் நடிக்கிறேன் என்றதும் சந்தோஷமாக இருந்தது. அதே சமயம் ஒருவித பயம் இருந்து கொண்டே இருந்தது. என் பயத்தை போக்கியது வேறு யாரும் அல்ல நம் அரவிந்த்சாமி தான்.

சிம்பு திறமையான நடிகர். அவரை சின்ன வயதில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இருப்பினும் இந்த படத்தில் சேர்ந்து நடித்ததன் மூலம் அவர் நல்ல மனிதர் என்பதை தெரிந்து கொண்டேன்.
விஜய் சேதுபதி நிஜத்திலும் சரி, நடிப்பிலும் சரி மிகவும் யதார்த்தமானவர். அவர் எப்பொழுதும் இப்படியே இருக்க வேண்டும் என்பதே என் கோரிக்கை என்றார்.
Arun Vijay Chekka Chivantha Vaanam

எமது ஏனைய தளங்கள்