பிக்குகளை ஏவி தமிழ் பாரம்பரியங்களை அழிக்க திட்டம்! சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றச்சாட்டு!

0
476

தமிழர்களின் பாரம்பரிய வணக்கஸ்தளங்களையும், அடையாளங்களையும் பௌத்த பிக்குகளை ஏவிவிட்டு திட்டமிட்ட அடிப்படையில் அழிக்கும் செயலில் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் இறங்கியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார். Mullitivu Budtha Statue Issue Charls Nirmalanathan Statement Tamil News

இவற்றை தடுப்பதற்குரிய நடவடிக்கையை அரசு விரைந்து எடுக்கா விட்டால் வடக்கு மக்களின் ஆதரவை பெறமுடியாத சூழ்நிலை உருவாகும் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அஞ்சல் அலுவலகக் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites