பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார் நாமல்!

0
521

கொழும்பில் நேற்று (05) எற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணியால், மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருப்பின்,அதற்காக தாம் மன்னிப்பு கோருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். MP Namal Rajapaksa Ask Excuse Public People Tamil News

கூட்டு எதிரணியால் நேற்று கொழும்பில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது முக்கிய வீதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்தனர்.

அதுமட்டுமன்றி பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் மதுபானங்களை அருந்தி ரகளையில் ஈடுபட்டு இருந்தனர்.

இது தொடர்பிலேயே நாமல் ராஜபக்ஷ பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர் என்பதனை, அரசாங்கத்துக்கு எடுத்துக்காட்ட முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites