ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ என்னும் தீவு அமைந்துள்ளது. இத்தீவில் இன்று அதிகாலை 3.08 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கம், சுமார் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 6.7 magnitude earthquake Japan
சுமார் 1.9 மில்லியன் மக்கள் வாழும் ஹொக்கைடோ தீவின் தலைநகரான சப்போரோவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படாத போதும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 3 மில்லியன் வீடுகளில் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்துள்ளன. இதனால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பேரழிவு மேலாண்மை நிறுவனம், நிலநடுக்கத்தால் அட்ஷூமா பகுதியில் பலர் காணாமல் போயுள்ளனர் எனக் தெரிவித்துள்ளது.
தீவிலுள்ள டோமரி அணுமின்நிலையத்தில் இயங்கி வரும் மூன்று உலைகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட போதும், மாற்று ஜெனரேட்டர் வசதியுடன் மின்சாரம் வழங்கப்படும் என ஜப்பான் அணுமின்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொலைதொடர்பு வசதிகளும் இந்நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
tags :- 6.7 magnitude earthquake Japan
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- சீனாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்!!
- பிரான்சில் பத்தில் ஆறு குழந்தைகள் திருமண வாழ்வில் பிறப்பதில்லை: அதிர்ச்சி தகவல்!
- உலகின் வயதான தம்பதி என்ற உலக சாதனை படைத்த ஜப்பான் ஜோடி
- சர்வதேச அளவில் 140 கோடி பேரை நோய் தாக்கும் அபாயம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
- ஜப்பானின் 25 ஆண்டுகால வரலாறு காணாத வலுவான சூறாவளி
- அமெரிக்காவில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவரால் நோயாளிக்கு ஏற்பட்ட பரிதாபம்
எமது ஏனைய தளங்கள்