புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது

0
587
Three people arrested Buddha statues

ஆணமடுவ மற்றும் கலன்பிந்துனுவௌ பகுதிகளில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் மற்றும் புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (Three people arrested Buddha statues)

ஆணமடுவ கோன்வௌ பகுதியில் அகழ்வில் ஈடுபட்டிருந்த 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் ஆணமடுவ கெட்டுகச்சி பிரதேசத்தை சேர்ந்த 28 முதல் 52 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கலன்பிந்துனுவௌ உப்புல்தெனிய பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பித்தளை மற்றும் பளிங்கு கற்களால் ஆன 3 புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

28 முதல் 39 வயதிற்கு இடைப்பட்ட இந்த சந்தேக நபர்கள், உப்புல்தெனிய பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Three people arrested Buddha statues